நெஞ்சுவலியை காரணம் சொல்லி வராமல் தப்பித்த கோபி, ராதிகாவுக்கு வந்த சந்தேகம் – “மகா சங்கமம்” சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகா கோபியை கண்டிப்பாக வர சொல்ல ஆனால் கோபி பல விதங்களில் நடித்து பிறந்தநாள் விழாவை தடுக்க நினைக்கிறார். இந்நிலையில் அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மகா சங்கமம்:
மகா சங்கமம் சீரியலில் அனைவரும் ஒற்றுமையாக தாத்தாவின் பிறந்தநாளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பாக்கியா ராதிகாவை அழைத்ததால் கோபி மட்டும் மிகவும் பதட்டமாக இருக்கிறார். இந்நிலையில் கோபிக்கு நெஞ்சு வலிப்பது போல நடிக்க அவருடைய திட்டங்களை தெரிந்து கொண்ட கதிர் மூர்த்தி முதலுதவி செய்வது போல நடித்து கோபியின் உண்மையான முகத்தை வெளியே கொண்டு வருகின்றனர். அதனால் கோபியின் அந்த திட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
பார்த்திபனிடம் விவாகரத்து கேட்ட காவ்யா – “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இந்நிலையில் ராதிகாவிடம் போன் செய்து கோபி பேச ஆனால் ராதிகா கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். பின் கோபி ராதிகாவிடம் நெஞ்சு வலி என சொல்ல அதனால் ராதிகா நீங்க வர வேண்டாம் என கூறுகிறார். பின் அவருடைய வீட்டில் எப்படி சமாளிப்பது என தெரியாமல் கோபி இருக்க வீட்டை விட்டு செல்ல முடிவு செய்கிறார். நெஞ்சு வலி என சொல்லிவிட்டு கோபி மருத்துவமனைக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக வீட்டில் இருக்கும் புகைப்படங்களை கழட்டி வைக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதன் பின் ராதிகா மட்டும் பிறந்தநாள் விழாவிற்கு வருகிறார். அப்போது பாக்கியாவிடம் உங்களது கணவர் எங்கே என் கேட்க அவருக்கு நெஞ்சு வலி என சொல்கிறார். அதேபோல கோபிக்கும் நெஞ்சுவலி என சொன்னது ராதிகாவுக்கு நினைவிற்கு வருகிறது. அதனால் ராதிகாவிற்கு சிறிதாக சந்தேகம் வர இருக்கிறது. ஆனால் அது பற்றி கோபியிடம் கேட்பாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. இதனால் மகா சங்கமத்தின் மூலம் கோபி மாட்டிக் கொள்வது உறுதியாகிவிட்டது.