கோபி பற்றி தெரிந்து கொண்ட தனம், ராதிகாவின் முடிவால் அதிர்ச்சி – “மகா சங்கமம்” எபிசோடில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மகா சங்கமத்தில் கோபியை பற்றிய உண்மை தனத்திற்கு தெரிய வருகிறது. அவர் ராதிகாவுடன் இது பற்றி பேச ஆனால் ராதிகா எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம் என பிடிவாதமாக இருக்கிறார். அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
மகா சங்கமம் செம ட்விஸ்ட்:
தற்போது பாக்கியலட்சுமி நட்சத்திரங்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்களும் கலந்து கொள்ளும் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி பாக்கியாவை நன்றாக ஏமாற்றிக் கொண்டிருப்பது போல் மூர்த்திக்கும் தனத்திற்கும் சந்தேகம் வருகிறது. ஆனால் இது பற்றி அவர்கள் எதுவும் சொல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் கோபிக்கு இரவெல்லாம் போன் வருவதை பார்த்து மூர்த்தி சந்தேகப்படுகிறார். பின் தனம் செல்வி சொன்னதை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.
இந்நிலையில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு ராதிகாவை பாக்கியா அழைத்து இருக்கிறார். ராதிகா கண்டிப்பாக கோபியையும் வர வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி வந்தால் மாட்டிக் கொள்வோம் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். அவர் ராதிகா வராமல் தடுக்க அப்பா பிறந்தநாளை நடத்தவிடாமல் தடுக்க முடிவு செய்கிறார். அதனால் அவர் என்ன முடிவு செய்திருக்கிறார் என தெரியாமல் இருக்கிறது. ராதிகா கோபி வராமல் இருந்தால் உங்களுடன் பேசவே மாட்டேன் என சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் கோபி வசமாக மாட்டிக் கொண்டு தவிக்கிறார். கோபியின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்த்த தனத்திற்கு ராதிகாவிடம் தான் கோபி பேசுகிறார் என்ற உண்மை தெரியவருகிறது. அவர் இது பற்றி பாக்கியாவிடம் சொன்னால் பாக்கியா வருத்தப்படுவார் என்பதால் சொல்லாமல் நேராக ராதிகாவிடம் பேச முடிவு செய்கிறார். ராதிகாவிடம் உண்மையை சொல்ல அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைந்தாலும் எனக்கு என்னுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்பது போல பேசுகிறார். இது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.