மீண்டும் ”பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரியாகும் வருண் – அனைத்து உண்மைகளும் தெரிய வருமா?
பாரதி எவ்வளவுதான் கண்ணம்மாவிடம் இருந்து விலகி இருக்க நினைத்தாலும் கண்ணம்மாவுடன் சேர்ந்து இருக்கும் படியான சூழ்நிலை தான் அமைந்து வருகிறது. இந்நிலையில் வருண் சீரியலில் மீண்டும் எண்ட்ரியாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்து மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போதுதான் ஒன்றாக சேருவார்கள், எப்போது தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். லட்சுமியும் தற்போது தான் தன்னுடைய அப்பா யார் என்பதை கண்டுபிடித்து விட்டார்.
விக்ரம் தான் வெண்பாவின் அப்பாவா? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த திருப்பம்!
ஹேமாவும் தன்னுடைய அப்பாவை சமையல் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்தால் நான்கு பேரும் ஒரே வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என கண்ணம்மாவை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் வெண்பாவின் அம்மாவும் தற்போது சீரியலில் புதிதாக எண்ட்ரியாகியுள்ளார். பாரதி பேசுவதைப் பார்த்தால் பாரதி உன்னை காதலிக்கவே இல்லை. நீ என்னிடம் பொய் சொல்லி இங்கே வந்திருக்கிறாய். நான் உடனே உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என வெண்பாவின் அம்மா பேசுகிறார்.
இதற்கு நடுவே வருண் சீரியலில் மீண்டும் என்ட்ரி ஆக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெண்பா தான் பாரதியிடம் வருணுக்கும் கண்ணம்மாவிற்கும் சின்ன வயதிலிருந்தே பழக்கம் இருக்கிறது. தற்போதும் கூட தவறாக தான் இருவரும் பழகிக் கொண்டிருக்கிறார்கள் என பாரதியிடம் கூறி பாரதியின் மனநிலையை மாற்றுகிறார். தற்போது வருண் வந்து பாரதியிடம் உண்மையை கூறினாலும் பாரதி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. ஆனாலும் பலரும் சொல்கிறார்களே என பாரதிக்கு மனதில் சிறிதாக சந்தேகம் எழுகிறது. இதற்குப் பிறகாவது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.