பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் எபிசோட் – வைரலாகும் வீடியோ!
தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மகா சங்கமம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஷூட்டிங்கின் போது இரண்டு குடும்பமும் சேர்ந்து அரட்டையடிக்கும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. பெரும்பாலும் டிஆர்பியில் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் முதல் 5 இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி பாக்கியாவிடம் மாட்டுவாரா இல்லையா என ரசிகர்கள் மாதக்கணக்கில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து தனது சாமர்த்திய புத்தியால் பொய் சொல்லி ஏமாற்றி தப்பித்து கொண்டே இருக்கிறார். தற்போது ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு செல்கிறார்கள்.
வீடு முழுக்க குடும்பத்தார்கள் நிரம்பி வழிந்து கொண்டிருப்பதால் ராதிகாவிடம் சரியாக பேச முடியாமல் கோபி தவித்து கொண்டிருக்கிறார். கோபி ஏதோ செய்கிறார் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே சந்தேகம் இருக்கிறது. ஏற்கனவே ராதிகாவிடம் கோபி போனில் பேசுவதை கதிர் கேட்டு விடுகிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ராமமூர்த்தி தாத்தாவுக்கு பழையபடி பேச்சு வருகிறது. தன்னை பற்றிய அனைத்து உண்மைகளையும் குடும்பத்தினர்கள் முன்னிலையில் போட்டுடைத்து விடுவாரோ என கோபி நடுங்கி கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஒரே நேரத்தில் அனைத்துமே கோபிக்கு சதி செய்து கொண்டிருக்கிறது. கோபி மாட்டுவாரா இல்லையா, அல்லது பிறந்தநாள் விழாவை நிறுத்தி மேலும் ராதிகாவுடான காதலை தொடர போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் அனைவரும் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் அரட்டை அடித்து கொண்டு கேரம் போர்டு விளையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.