பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு – அமித் ஷா அறிவிப்பு!!
பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்களின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவிக்காலம் நீட்டிப்பு
இந்தியாவை ஆளும் கட்சியான பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தில், ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகளை பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜனவரி 20, 2023 உடன் முடிவடைய இருந்த ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம், இப்போது ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
PMAY திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை – மேற்கு வங்க அரசு மத்திய அரசுக்கு கடிதம்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த முடிவு கட்சியை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அமித் ஷா கூறுகையில், வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாஜக கட்சியினருக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக பெரிய அளவிலான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.