எம்.எல்.ஏ-க்களுக்கு பரிசு பொருட்கள், பிரியாணி ‘கட்’ – முதல்வர் அதிரடி உத்தரவு!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களாக உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் போன்றவை வழங்குவது மற்றும் உயர்தர உணவகத்தில் இருந்து உணவு வாங்கி தருவது போன்றவை கூடாது என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் உத்தரவு:
சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது, வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது அதை வழங்க வேண்டாம் என முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அறிவிப்பு!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களாக உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலக அதிகாரிகள், காவல்துறையினர் என 1000 பேருக்கு உணவு வழங்கி வந்தனர். அதற்காக அரசு தரப்பில் இருந்து 3 லட்சம் ரூபாய் தினசரி செலவிடப்படுகிறது. இது போன்ற செலவு செய்வதற்கு பட்ஜெட்டில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, பிரியாணி, பரிசுப் பொருட்கள் போன்றவை வழங்குவதை நிறுத்துமாறு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் தங்களுக்கு தேவையான உணவை தாமே சொந்த செலவில் வாங்கி கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டசபை கேன்டீனில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் இந்த சிக்கன நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.