மீண்டும் இந்தியாவை உலுக்கும் பறவை காய்ச்சல்.. இறைச்சி விற்பனைக்கு தடை – பொதுமக்கள் அச்சம்!
பறவைக்காய்ச்சலின் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் கேரளா மாநிலத்தில் அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் நாட்டில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல்:
தற்போது பருவ கால மாற்றத்தினால் பருவமழை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பருவமழை காலத்தில் பல்வேறு காய்ச்சல் வருவது இயல்பான ஒன்று. இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள சில பண்ணைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்து உள்ளது. இது குறித்து கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் வாத்துகளுக்கு எச் 5 என் 1 வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 20,471 வாத்துகளை கொல்ல தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ட்விட்டரை வாங்கியதும் எலான் மஸ்க் செய்த அதிரடி காரியம் – CEO உள்பட முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம்!!
Exams Daily Mobile App Download
மேலும் கேரளா மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் குறித்த அச்சம் நிலவி வருகிறது. கேரளா மாநிலத்தில் 2 ஆண்டுகளில் 3-வது முறையாக பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பறவை காய்ச்சல் வேறு இடங்களுக்கு பரவாமல் இருக்க 20 ஆயிரம் கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று குறித்த ஆய்வினை மேற்கொள்ள 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அரசு நியமிக்கவுள்ளது. இதன்காரணமாக தமிழகத்திலும் நாமக்கல் மாற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.