அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – 3 லட்சம் கோழிகளை அளிக்க அரசு திட்டம்!
ஏவியன் இன்புளுயன்ஸா என்ற வைரசால் பரவ கூடிய ஒரு வகையான காய்ச்சல் தான் பறவை காய்ச்சல். தற்போது இந்த காய்ச்சல் ஜப்பானில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் பரவி வருவது. இதனால் கோழிகளை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல்:
உலகம் முழுவதும் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இருமல், காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, சுவாச கோளாறு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். ஜப்பானில் தற்போது இந்த பறவை காய்ச்சலால் கோழிகள் அதிகம் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow our Instagram for more Latest Updates
கடந்த வருடம் ஜப்பான் நாட்டில் பறவை காய்ச்சல் காரணமாக 9.87 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன. மேலும் மக்களின் நலன் கருதி அனைத்து மாகாணங்களிலும் கோழிக்கறி, முட்டை ஏற்றுமதிக்கு ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போல ஜப்பானில் நடப்பு ஆண்டும் பறவை காய்ச்சல் கோழிகளுக்கு பரவி வருகிறது.
WhatsApp-ல் இது புதுசு.. இனி Status பார்ப்பது சுலபம் – பயனர்களுக்கு வர இருக்கும் புதிய அம்சம்!!
Exams Daily Mobile App Download
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பரவி வரும் இந்த காய்ச்சலால் கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட கோழிகளிடம் இருந்து வைரஸ் மற்ற கோழிகளை தாக்காமல் இருக்க ஜப்பானில் ஆய்ச்சி என்ற மாகாணத்தில் சுமார் 3,10,000 கோழிகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோஹிமா மாகாணத்தில் 34,000 கோழிகள் அழிக்கப்பட்டன. மேலும் இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.