தமிழகத்தில் ஜன 27 & 28 தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி – ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின் ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன 27 மற்றும் ஜன 28 தேதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பறவைகள் கணக்கெடுக்கும் பணி:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்து வனத்துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் 2022-23ம் ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பானது நீர் பறவைகள் மற்றும் நிலப்பறவைகள் என 2 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அறிக்கை!!
Follow our Instagram for more Latest Updates
மேலும் நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது ஜனவரி 28ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதே போல நிலப்பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பறவைகள் கணக்கெடுப்பிற்காக தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டியுள்ளதால் நீர் பறவைகளின் கணக்கெடுப்பிற்காக 20 இடங்களிலும், நிலப்பறவைகளின் கணக்கெடுப்பிற்காக மாவட்ட வாரியாக 20 இடங்களிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஜன 27 மற்றும் ஜன 28 தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் 9444223174 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.