மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நவ.8 முதல் ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்!
நவம்பர் 8 முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
வருகைப்பதிவு:
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் நாட்டில் அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் முழுஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அரசின் முக்கிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையின் பாதிப்புகள் குறைந்த பின்னர், இயல்பு நிலை மீண்டும் திரும்ப தொடங்கியது. அதன் பின்னர், 2021 மார்ச் மாதத்தில் கொரோனா 2ம் அலை பாதிப்புகள் அதிகரித்தது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்புகள் வரலாறு காணாத அளவிற்கு இருந்தது.
TNPSC கால்நடை உதவியாளர் காலிப்பணியிடங்கள் நியமனம் – உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநில வாரியான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்துகள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற அனைத்தும் மூடப்பட்டது. பாதிப்புகள் சற்று குறைந்த பின்னர், அரசு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு உபயோகிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளது.
இதனால் வரும் நவம்பர் 8 முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகையை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பணியாளர் அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள்:
- பயோமெட்ரிக் இயந்திரங்களுக்கு அருகில் சானிடைசர்கள் கட்டாயமாக வைக்கப்படுவதை உறுதி செய்வது துறைத் தலைவர்களின் பொறுப்பாகும்.
- அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் இயந்திரத்தை உபயோகிப்பதற்கு முன்னரும், பின்னரும் கண்டிப்பாக சுத்திகரிப்பானை பயன்படுத்த வேண்டும்.
நவ.8 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!
- பயோமெட்ரிக் இயந்திரத்தை உபயோகிக்கும் போது ஆறு அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் பயோமெட்ரிக் வருகை இயந்திரங்களை நிறுவலாம்.
- அனைத்து ஊழியர்களும் எல்லா நேரங்களிலும் கட்டாயம் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும்.
- அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களில் எல்லா நேரங்களிலும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.