மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பயோமெட்ரிக் வருகைப்பதிவு மீண்டும் அமல்!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - பயோமெட்ரிக் வருகைப்பதிவு மீண்டும் அமல்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - பயோமெட்ரிக் வருகைப்பதிவு மீண்டும் அமல்!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பயோமெட்ரிக் வருகைப்பதிவு மீண்டும் அமல்!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக் வருகைப்பதிவு

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. மேலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவியதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது உணர முடிந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது.

SBI & HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு! முழு விவரங்கள் இதோ!

அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதனால் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 7ம் தேதி முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

அத்துடன் அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் முறையில் ஊழியர்களின் வருகை பதிவை கணக்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!