உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சி தகவல்!
கொரோனா மூன்றாவது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி தகவல்:
உலகையே புரட்டி போட்ட கொரோனா தொற்று கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த தொற்றின் வேகம் சீனாவில் பல மடக்கில் இருந்தது. வுகான் நகரமே கொரோனாவால் முழுவதுமாக முடக்கப்பட்டு இருந்தது. இந்த தொற்றின் பரவல் வேகத்தை கட்டுப்படுத்த, சீன சுகாதாரத்துறை பலவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பலனாக கொரோனா பரவல் சீனாவில் குறையத் தொடங்கியது. அந்த சமயத்தில்,நோய் தொற்று இந்தியா, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வேகமெடுக்கத் தொடங்கியது. பல மடங்காக தொற்றின் வேகம் இருந்தது. சீனாவை போல, மற்ற நாடுகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டு, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள் நடைபெற்றது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – பாதுகாப்பானதை தெரிந்து கொள்வது எப்படி?
கொரோனா 2வது அலையின் போது அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, பரவலை முழுமையாக ஒழிக்க ஒரே ஒரு ஆயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்த உலக சுகாதாரதுறை இரண்டு வகையான தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்தன, இருப்பினும் தற்போது சீனாவில் பல பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக பரவ ஆரம்பித்தது. எனவே இங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நாட்டில் கொரோனா 4வது அலை பரவக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார். மேலும் அண்மையில் பில்கேட்ஸ் அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா தொற்றின் மிக மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை. இன்னும் மாறுபாடு ஏற்பட்டு கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார்.