இனி நம்பர் பிளேட் இப்படி தான் இருக்கணும்…இல்லையெனில் வாகனம் கிடைக்காது – அதிரடி உத்தரவு!
சென்னையில் செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட் தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
நம்பர் பிளேட்:
சென்னையில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் திருடிய வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி பயன்படுத்துகின்றனர். பொதுவாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் வெள்ளை நிறத்திலும்,அதில் இருக்கும் எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இதேபோன்று வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட் மஞ்சள் நிறத்திலும், அதில் இருக்கும் எழுத்துக்கள் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் பெரும்பாலானோர் நம்பர் பிளேட்டை அரசியல், ஆன்மீகம், சினிமா ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைத்துக் கொள்கின்றனர். அதனால் குற்ற செயல்கள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தற்போது சென்னையில் நம்பர் பிளேட் விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நம்பர் பிளேட் சரியாக இல்லையெனில் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் உடனடியாக நம்பர் பிளேட்டை மாற்ற வைத்து, அதன் பின்பு வாகனங்கள் அனுப்பப்படுகிறது.
தமிழக திரையரங்குகளில் நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் ரத்து – அரசுக்கு கோரிக்கை!!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக புளியந்தோப்பு சரக போக்குவரத்து உதவி கமிஷனர் கூறியிருப்பதாவது, அனைத்து வாகனங்களும் அரசு நிர்ணயிதுள்ள நம்பர் பிளேட் விதிமுறைகளின் படி வடிவமைக்கப்பட வேண்டும் இல்லையெனில் அந்த வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் சம்பவ இடத்திலேயே அபராதம் செலுத்தி, நம்பர் பிளேட்டை உடனடியாக மாற்றி காண்பித்தால் மட்டுமே வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.