ஜூன் 23 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
முழு ஊரடங்கில் இருந்து இன்று (ஜூன் 23) முதல் தளர்வுகளை அளிக்க பீஹார் அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பாதிப்புகள் மிக குறைவாக பதிவு செய்யப்பட்டு வரும் மாநிலங்கள் தோறும் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீஹார் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதால், முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிப்பதாக கடந்த 21 ஆம் தேதி அன்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக பீஹாரில் ஊரடங்கு தளர்வுகளை அளிப்பது குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகளின் படி,
- மாலை 5 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் பொது பூங்காக்களை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
- இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கடைபிடிக்கப்படும்.
- மளிகை, காய்கறி, பால், இறைச்சி மற்றும் மீன் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
- பொது பூங்காக்களில் காலை நடைப்பயிற்சி செய்வதற்கும், பார்வையாளர்களுக்காகவும் மாலை 6 வரை திறக்கப்படும்.
- சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
மேலும் பொது மக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என முதல்வர் நிதீஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் 2வது தலைநகர் திருச்சி? சட்டசபையில் கோரிக்கை!
தவிர ஜூன் 21 அன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 88.09 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்துள்ள நிலையில், அவற்றில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்கிய முதல் 5 மாநிலங்களில் பீகார் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.