மே 4 முதல் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் – ரோந்து பணிகள் தீவிரம்!!
பீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் முழு ஊரடங்கு மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காவல் துறையினர் கடுமையான ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் மட்டும் 46% ஆக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் தொற்று பாதிப்புகள் இருந்த போதிலும், இந்தியாவில் அது எல்லையை மீறிய ஒன்றாக ஆகி விட்டது. ஒரு நாளில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி விட்டது.
முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ள மாநிலங்கள் பட்டியல்!!
இதனால் மத்திய அரசு அனுமதியடன் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி அரசுக்கு உத்தரவிட்டது. இதனால், மே 4 முதல் 15ம் தேதி வரையிலான 11 நாட்கள் முழு ஊரடங்கை முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். நேற்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
காலை 7 மணி முதல் 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அல்லாத சில கடைகளும் திறக்கப்பட்டது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஊரடங்கு காரணமாக போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்