பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் நாளில் பிரபல நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் – பீதியில் Housemates!
விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” தொடங்கப்பட்டு இன்று இரண்டாவது நாள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுவதாக ஹவுஸ்மேட்ஸ் சிலர் பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6
ரசிகர்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 20 போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். போட்டியாளர்கள் சென்ற முதல் நாளே கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டது, போட்டியாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் முதல் நாளே சுவாரசியம் குறைவாக இருந்த 4 பேரை வீட்டின் வெளியே படுக்க வைத்துள்ளனர்.
முதல் நாளே நிவா, குயின்ஸி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகியோர் வீட்டின் வெளியே கொட்டும் மழையில் தூங்கினார்கள். இந்நிலையில் கடந்த சீசன்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலர் வீட்டில் சில சத்தம் கேட்பதாகவும், அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாகவும் பேசிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வகையில் இந்த சீசனிலும் இது போல நடப்பதாக போட்டியாளர்கள் பேசிக் கொள்கின்றனர். அதாவது இரவு தூங்கும் போது ரச்சித்தா ஏதோ சத்தம் கேட்பதாக சொல்கிறார்.
தன்னுடைய சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க் – அதிரடி முடிவால் ஆடி போன ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
அதாவது ரச்சித்தா, “ஜி.பி. முத்து அண்ணா சிரிப்பது போல சத்தம் கேட்டது, நான் எழுந்து பார்த்தேன், ஆனால் அவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். பின்னர் நான் தூங்கும் பொழுது மற்றவர்களும் சிரிப்பது போல சத்தம் கேட்டது. அதனால் என்னால் தூங்கவே முடியவில்லை” என அவர் சொல்ல, அது மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பீதியை கிளப்பி இருக்கிறது. ஒருவேளை உண்மையிலயே பிக் பாஸ் வீட்டில் ஏதேனும் அமானுஷ்யம் இருக்குமோ என ரசிகர்கள் தற்போது சந்தேகிக்க தொடங்கிவிட்டனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்