உண்மையை அறியாத ஹவுஸ்மெட்ஸ்.. ஆண்டவர் எடுத்த அவதாரம் – வெளியான “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் மூன்றாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. சென்ற வாரம் முழுவதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் நிலையில், உண்மையை சொல்ல போவதாக கமல் சார் வரும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 3 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் வாரத்தில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகை மைனா நந்தினி களமிறங்கினார். அதன் பின் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
போட்டியாளர்கள் அனைவரும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடி வருகின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்பதால், பல விளையாட்டு யுக்திகளை கையாண்டு விளையாடி வருகின்றனர். அதனால் ஏகப்பட்ட பிரச்சனைகள், சண்டைகள், வாக்குவாதங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும் பல சீசன்களுக்கு பின் இந்த சீசனில் முக்கியமான குறும்படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கமல் சார் வந்து என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும், ஆனால் இவங்களுக்கு தெரியவில்லை. பழி போடுவது ஈசி பழியை தாங்குவது கஷ்டம். சில பேரை காப்பாற்றியாக வேண்டும், சிலரை காப்பாற்றவே முடியாது என பேச, இன்றைய எபிசோடில் ஆண்டவர் ஆட்டம் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வெளியான தகவலின் படி அசிமிற்கு கமல் பயங்கர அறிவுரை கூறி இருப்பதாகவும், ஷிவினை பாலின கேலி செய்ததற்கு எதிராக பேசி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றைய எபிசோட் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.