ஓய்வூதியதாரர்களுக்கான சூப்பரான அறிவிப்பு – நடப்பு நிதியாண்டில் அடிச்ச பம்பர் லாட்டரி!!
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சாமானிய மக்கள் முதல் ஓய்வூதியதாரர்கள் வரை என அனைவருக்கும் பலன் அளிக்கும் வகையில் பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியாகி இருக்கும் அறிவிப்புகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஓய்வூதியதாரர்கள்
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி விலக்கு, வரி முறையில் மாற்றம், சிறு சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல வகையான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் கீழ் ரூ.28,138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் ஓய்வூதியம் பெறுவோர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டில் 3,582.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 5,431 கோடி ரூபாய் ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளது. இதே போல் பாதுகாப்புக்கான ஓய்வூதிய பட்ஜெட்டிலும் 15.5% உயர்வு செய்யப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2022-23 பட்ஜெட்டில் பாதுகாப்பான ஓய்வூதிய தொகை ரூ.1,19,696 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2023-24 பட்ஜெட் ரூ.1,38,205 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு (சிவில்) மூலதன ஒதுக்கீடாக ரூ.8,774 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பு நிதியாண்டில் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிதும் பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.