தமிழகத்தில் ஆக.6ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயமாக உள்ளது. அதுவும், தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அதிகம் வேலைவாய்ப்பின்மை நிலவி வருகிறது. மேலும் இதை தடுக்கும் விதமாகவும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திருநெல்வேலி வண்ணாரபேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் SSLC பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம்.
IISER நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.25,000/-
இந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநா்கள் சுய தொழில் செய்வதற்கு ஏற்ப கடனுதவிகள் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரக்குறிப்பு, கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது. இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச் சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.