‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷின் சர்ச்சை பதிவு – அவரே அளித்த விளக்கம்!
முதல் போட்டியாளராக ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயரில், சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அவர் விளக்கம் அளித்துள்ள பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக் பாஸ் சுரேஷ்
டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தலத்தில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகி கொண்டிருக்கிறது. இதுவரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருவதால் ஒவ்வொருவரும் எப்படி இருப்பார்கள் என்று ரசிகர்கள் ஏற்கனவே கணித்து வைத்துள்ளனர். அதே போல வனிதா, சுரேஷ் ஆகியோர் தங்களது வழக்கமான குணத்தை வெளிப்படுத்த ‘பிக் பாஸ்’ வீடே சற்று ரணகளமாகி இருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!
அதுவும் வனிதா காஃபி உட்பட கண்டதெற்கெல்லாம் சண்டையிட, சுரேஷ் தாத்தா வழக்கமான மூட்டி விடும் வேலையே சிறப்பாக செய்து வந்திருந்தார். இப்படி பல்வேறு கலவரத்திற்கு மத்தியில் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்திருக்கிறது. எப்படி இருந்தாலும் வழக்கம் போல முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்று போட்டியாளர்கள் கணித்து வர, ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. இது எதிர்பார்த்தது தான் என்றாலும் வனிதா ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருப்பது போட்டியாளர்களை சற்றே கலவரமாக்கி இருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!
இப்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி, தான் இம்முறையும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருப்பதாகவும், அபிநய் என்னை விட அதிக ஓட்டுகளை வாங்கி இருக்கிறாரா. நீங்கள் என்னை வைத்து கன்டென்ட் எடுத்துவிட்டு என்னையே வெளியே துரத்தி விட்டிருக்கிறீர்கள் என்று பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜுலியை குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே சில அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த பதிவுக்கு விளக்கம் அளித்துள்ள சுரேஷ், ‘இது தன்னுடடைய வலைதள கணக்கு இல்லை என்றும் யாரோ போலியாக இதை பதிவிட்டுள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.