‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதாவை அழ வைத்த அபிராமி – இதற்கு தானா? கலாய்க்கும் ரசிகர்கள்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்து வரும் வனிதா விஜயகுமாரை, அபிராமி ஒரு காஃபி பவுடருக்காக தேம்பி தேம்பி அழவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
பிக் பாஸ் வனிதா
விஜய் டிவியில் சுமார் 5 சீசன்களாக ஒளிபரப்பாகி ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியானது தற்போது ‘பிக் பாஸ்’ அல்டிமேட் என்ற பெயரில் ஹாட்ஸ்டார் OTT தலத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில், இதுவரை நடைபெற்ற ‘பிக் பாஸ்’ சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டுமாக இடம்பிடித்துள்ளனர். அதுவும் குறிப்பாக சர்ச்சைக்கு பெயர் போன, எளிதில் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய சிலர் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் கலந்து கொண்டு வருவதால் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சூடு பிடித்துள்ளது.
இது தவிர ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ எவ்வித எடிட்டுகள் மற்றும் சென்சாரும் இல்லாமல் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருவதால், இதில் காட்டப்படும் சில விஷயங்கள் வழக்கம் போல சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதனுடன் ஆரம்பம் முதலே ‘பிக் பாஸ்’ அல்டிமேட் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு காரசாரமான விவாதங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ‘பிக் பாஸ்’ சீசன் 3ல் கலந்து கொண்டு சர்சைக்குரியவராக கருதப்பட்ட போட்டியாளர் வனிதா மீண்டும் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
எதிர்பார்த்ததை போலவே ஆரம்பம் முதல் ‘பிக் பாஸ்’ வீட்டில் தனது அதிகாரத்தை காட்ட நினைக்கும் வனிதாவை சுதாரித்து கொண்ட சிலர் அவரை மட்டம் தட்ட துவங்கியுள்ளனர். குறிப்பாக நான் பேசுவது தான் சரி என்ற நோக்கத்தோடு பேசும் வனிதாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அபிராமி, பாலாஜி, சுரேஷ் ஆகியோர் சில விஷயங்களை செய்து வருகின்றனர். இதற்கிடையில் வனிதா, ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவின் முதல் நாளில் ஆரம்பித்த காஃபி பவுடர் பிரச்சனை தற்போது பெரிதாகி இருக்கிறது. ஏற்கனவே காஃபி பவுடர் கேட்டு வனிதா பிக் பாஸிடம் அடம் பிடிக்க, லக்சுரி பட்ஜெட் மூலம் காஃபி பவுடர் கிடைக்கிறது.
அதனை தனக்கு வேண்டும் என்று ஒளித்துவைத்துக்கொள்கிறார் வனிதா. ஆனால் இது லக்சுரி பட்ஜெட் மூலம் கிடைத்ததால் அனைவருக்கும் பொதுவானது என்று அபிராமி பேச, இது வாக்குவாதமாகி சண்டையில் முடிந்திருக்கிறது. முடிவில் எனக்கு காஃபி பவுடர் வேண்டாம் என்று வீசி விட்டு வந்த வனிதா, எனக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. நான் வெளியே போகப் போகிறேன் என்று கதறி அழுகிறார். இந்த காட்சிகளை கண்ட ரசிகர்கள் ஒரு காஃபி பவுடரை வைத்து வனிதாவையே அபிராமி அழ வைத்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.