விஜய் டிவி “பிக் பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நான்கு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி தமிழில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் முகின், மூன்றாவது சீசனில் ரித்திகா, நான்காவது சீசனில் நடிகர் ஆரி ஐந்தாவது சீசனில் நடிகர் ராஜு ஜெயமோகன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனமாக இனி “பாக்கியலட்சுமி” நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
அதில் இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த மூன்று வாரங்களில் 4 பேர் எலிமினேட் ஆகி இருக்கின்றனர். தற்போது 10 பேர் விளையாடிய நிலையில் அதில் வனிதா சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு தனிப்பட்ட விருப்பத்தால் வெளியேறினார். அதனால் இந்த வாரம் இருக்கும் 9 பேரில் ஒருவர் எலிமினேட் ஆக இருக்கின்றனர்.
விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
மேலும் இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யமாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். சிம்பு இதற்கு முன்னதாக ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார். அதனால் நிகழ்ச்சியிலும் அவரது பங்களிப்பு நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே வனிதா வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.