‘விஜய் டிவி’ பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் & அமீர்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது இறுதி சுற்றிற்கான டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்று இறுதி இடத்தில் இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது .
பிக் பாஸ் எலிமினேஷன்:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது 8 போட்டியாளர்கள் டிக்கெட் டூ பைனல் டாஸ்க்கில் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். முதல் சுற்றில் நிரூப் வெளியேற்றப்பட்டார். பின் இரண்டாவது சுற்று தொடங்கப்பட்டது. அதில் பிரியங்கா அமீர் சேர்ந்து தாமரையை டார்கெட் செய்து தோற்கடித்தார்கள். மேலும் பாவ்னியை ராஜு டார்கெட் செய்து தோற்கடித்தார். அதனால் அவர்கள் இருவரும் போட்டியை விட்டு வெளியேறினார்கள்.
மக்களின் அபிமான “குக் வித் கோமாளி சீசன் 3” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குறைவான வாக்குகள் பெற்று யார் வெளியேறுவார் என மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் வெளியேறினார்கள். அதே போல இந்த வாரமும் இருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இறுதி சுற்றிற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் வெற்றியாளர் யார் என விரைவில் தெரிய இருக்கிறது.
உண்மை சம்பவத்தை கையில் எடுத்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – எதிர்ப்பும், ஆதரவும்!
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் முதல் இடத்தில் ராஜு, இரண்டாவது இடத்தில் பிரியங்கா, மூன்றாவது இடத்தில் நிரூப், நான்காவது இடத்தில் தாமரை, ஐந்தாவது இடத்தில் பாவ்னி, ஆறாவது இடத்தில் சிபி, ஏழாவது இடத்தில் அமீர், எட்டாவது இடத்தில் சஞ்சீவ் ஆகியோர் இருக்கின்றனர். அதனால் இந்த வாரம் சஞ்சீவ் மற்றும் அமீர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் சிபி குறைவான வாக்குகளுடன் இருப்பதால் இன்னும் சில நாட்களில் அவர் குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே வார இறுதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.