இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர்தான் – வாக்குகள் பட்டியல்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் மூன்றாவது வாரத்தின் இறுதி நாளான இன்று நாமினேஷனில் 9 பேர் இருக்கிறார்கள். அதில் இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்றவர் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு மூன்றாவது வாரம் முடியும் தருவாயில் இருக்கிறது. முதல் வாரத்தில் நாமினேஷன் இல்லாமல் இருந்தாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு திருநங்கை நமீதா மாரிமுத்து வெளியேறினார். அதன் பின் இரண்டாவது வார நாமினேஷனில் 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். அதில் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று மலேசியா மாடல் நாதியா சங் வெளியேறினார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா மற்றும் கஸ்தூரி இணைந்து செய்ய ரீல்ஸ் – ரசிகர்கள் பாராட்டு!
பின் மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது. அதில் அபிஷேக், அக்ஷரா, பாவனி ரெட்டி, தாமரை செல்வி, சின்னப்பொண்ணு, அபினய், பிரியங்கா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் நாமினேஷனில் இருக்கிறார்கள். மேலும் வீட்டின் தலைவராக சிபி இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து உள்ளது. பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச் செல்வி ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதலில் இருக்கிறார்கள்.
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!
பின் அவர்களுக்கு அடுத்தபடியாக இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய் மற்றும் சின்னப்பொண்ணு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் கடைசி இடத்தில் அபிஷேக் ராஜா உள்ளார். அபிஷேக் ராஜா ஆரம்பம் முதலே பார்வையாளர்களை எரிச்சலாக்கி வருகிறார். கன்டென்ட் வேண்டும் என்பதற்காக தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறார். ஆனால் அவர் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை என தகவல் கசிந்துள்ளது.