விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் வரும் எலிமினேஷன் தான் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் ராஜா தான் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களை கடந்து வெற்றிகரமாக 5வது சீசனில் உள்ளது. இந்த முறை ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில், உலக நாயகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் கடந்த வாரம் கமலின் தோழியான ரம்யா கிருஷ்ணன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராஜமாதா மிகவும் கடுமையாக நிகழ்ச்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த வார நிகழ்ச்சி இருந்தது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை – TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!

ரம்யா கிருஷ்ணன் மிகவும் சகஜமாகவும், கலகலப்பாகவும் நிகழ்ச்சியை நடத்தினார். அடுத்த வாரமும் ரம்யா கிருஷ்ணன் தொடருவரா அல்லது கமல் வருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுவரை போட்டியில் இருந்து நமீதா, நாடியா சாங், சின்னப்பொண்ணு, சுருதி, இசைவாணி, ஐக்கி பெரி போன்றவர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் அபிஷேக் ராஜா மூன்றாவது நபராக வெளியேற்றப்பட்டார். ஆனால் சில வாரங்களுக்கு முன்னதாக யாரும் எதிர்பார்க்காத வகையில் அபிஷேக் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சத்தமே இல்லாமல் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்திய சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

இவரது வருகை ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. மக்கள் ஒட்டு போட்டு வெளியில் அனுப்பிய போட்டியாளரை நிகழ்ச்சியில் மீண்டும் சேர்த்துள்ளது சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் இவர் மீண்டும் போட்டிக்குள் நுழைந்து முன்பு போல் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்து வந்தார். ஆனால் தற்போது நடந்து வரும் ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்கில் இவர் பேசுவது பலருக்கும் பிடிக்கவில்லை. இந்த வாரம் அமீர், சஞ்சீவ் மற்றும் தலைவர் நிரூப் ஆகிய மூவர் மட்டுமே எவிக்சனில் இருந்து தப்பியுள்ளனர். இதில் அபிஷேக் ராஜா மக்கள் ஓட்டுகளை மிகவும் குறைவாகவே பெற்றுள்ளார். இதனால் இந்த வார இறுதியில் அபிஷேக் தான் போட்டியில் இருந்து வெளியேறப் போவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!