திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்க வரும் ‘பிக் பாஸ்’ சுஜா வருணி – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் நடிகை சுஜா வருணி. திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த அவர் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சுஜாவருணி:
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இவர் மிளகாய், பென்சில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் படங்களை விட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான் மக்களிடம் நல்ல புகழை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நல்ல பெயருடன் வெளியேறியவர்களில் இவரும் ஒருவர்.
அதன் பின் அவர் தன்னுடைய நீண்ட காதலரை திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு யாரும் இல்லை பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் தான். அந்த அழகான தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். மேலும் அவர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது குடும்பம் மற்றும் குழந்தை பற்றியும் அடிக்கடி வீடியோ பதிவு செய்வார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!
திருமணத்திற்கு பின் மொத்தமாக மாறிவிட்ட சுஜா மீண்டும் நடிக்க வர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்த ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவித்து இருக்கிறார். அவர் சன் டிவியில் அன்பே வா சீரியலில் தற்போது ஸ்பெஷல் ரோலில் நடிக்கிறாராம். இதை கேட்டதும் சுஜா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.