பிக்பாஸ் வீட்டை விட்டு நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் – அவரே வெளியிட்ட தகவல்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் வாரத்திலேயே 18வது போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் முதன்முறையாக பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சி நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அகில்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ஆனால் அவர் கலந்து கொண்ட 6 நாட்களில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார். அதற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. சேனல் தரப்பில் அவர் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலர் தாமரை உடன் நடந்த சண்டை காரணமாக அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதாக தெரிவித்தனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!
தற்போது அவர் வெளியேறி 1 மாதம் முடிவடைந்த நிலையில் தனது ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைத்தளம் வாயிலாக பதில் அளித்து இருக்கிறார். அப்போது பிக்பாஸ் மீண்டும் செல்வீர்களா? என கேட்டதற்கு, போகலாம், போகாமலும் இருக்கலாம் என்றார். தாமரையுடன் சண்டையா என்ற கேள்விக்கு அவர், அவர் ஒரு நல்ல பெண் தான், சில விஷயங்கள் தெரியவில்லை. எங்களுக்கு எந்த சண்டையும் இல்லை, அவர் வெளியே வந்தால் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளில் அவரை பாட வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.