‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து ரூ.5 லட்சத்துடன் வெளியேறிய அமீர்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் பிக்பாஸால் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு போட்டியாளர் அமீர் வீட்டை விட்டு வெளியேறியதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் அமீர்
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பித்து சுமார் 80 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு திருநங்கை போட்டியாளர் உட்பட 18 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களுக்குள் முடிவுக்கு வர இருப்பதால் இந்த வார எலிமினேஷனில் அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரோஷினி, வினுஷா 2 கண்ணம்மாவுடன் தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
எனவே மீதமிருக்கும் 8 போட்டியாளர்களுக்கு தற்போது இறுதி கட்டத்திற்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு, அதாவது டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. அந்த வகையில் இப்போது நடத்தப்படும் டாஸ்குகளில் வெற்றி பெறுபவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி மேடையை அலங்கரிப்பதற்கான வாய்ப்புகளை பெற இருக்கின்றார்.
Vijay TV Bigg Boss 5 Promo | போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டூ பைனல் டாஸ்க்!
இந்த வகையில் ஸ்வாரசியமும், விறுவிறுப்புமாக நகர்ந்து வரக்கூடிய ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் அமீர் ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ‘பிக்பாஸ்’ சீசனின் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர் அமீர் ஆரம்பம் முதல் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். இப்படி இருக்க வழக்கம் போல ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் கொடுக்கப்படும் ரூ.5 லட்சத்தை, இம்முறை அமீர் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.