திருமண கோலத்தில் பிக்பாஸ் வருண், அக்ஷரா வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு பின் நெருங்கிய நண்பர்களானவர்கள் தான் வருண் மற்றும் அக்ஷரா ஜோடி. அவர்கள் திருமண கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிக்பாஸ் வருண் & அக்ஷரா:
சின்னத்திரையில் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் மாபெரும் வெற்றி அடைந்தது. ஐந்தாவது சீசன் இறுதியாக முடிவடைந்த நிலையில் அதில் நடிகர் ராஜ் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த சீசனில் பல புது முகங்கள் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் மாடல் அழகியான அக்ஷரா பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் நடிகர் வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். தொடக்கம் முதல் இருவரும் ஒன்றாக உடற்பயிற்சி செய்வது என நெருங்கி பழகிய அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்தது. மேலும் வெளியே இருந்து பார்ப்பர்வர்களுக்கு இவர்கள் காதலர்களா என சந்தேகம் வரும் அளவிற்கு இருவரின் நட்பு இருந்தது. ஆனால் நாங்க வெறும் நண்பர்கள் தான் என பல இடங்களில் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வருண் அக்ஷரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் கூட அதே நட்புடன் பழகி வருகின்றனர். இருவரும் வெளியே செல்வதும், பரிசுகளை பரிமாறிக் கொள்வதும் என சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அப்டேட் வந்தது. தற்போது இருவரும் திருமண கோலத்தில் செய்த போட்டோஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அது எதுவும் இல்லை எனவும், அது வெறும் போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.