“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 98 நாட்களை கடந்து மக்கள் பலரது மனதை கவர்ந்த போட்டியாளராக சென்ற வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தாமரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தாமரை:
பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஆதரவுடன் 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அவர்களில் பலர் புது முகங்களாக இருந்தனர். அதில் ஒருவர் தான் தாமரை செல்வி அவர் ஒரு நாட்டுப்புற கலைஞர், 22 வருடமாக இந்த துறையில் இருந்த அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. நிகழ்ச்சி தொடக்கத்தில் அவருடைய வெகுளியான பேச்சு பலரது மனதை கவர்ந்தது. மேலும் முதல் வார தலைவர் போட்டியில் வெற்றியும் பெற்றார்.
ராஜா ராணி 2 சந்தியாவாக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக் ப்ரோமோ!
அதன் பின் அனைத்து டாஸ்குகளிலும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்தார். அதனால் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராக இவர் இருந்தார். அதன் பின் டிக்கெட் டூ பைனல் டாஸ்கில் பிரியங்கா உடன் சண்டையிட்டதால் சிலரது விமர்சனங்களை பெற்றார். ஆனால் அதன் பின் அவர் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனார். இந்நிலையில் இந்த வாரம் இறுதி சுற்று நடைபெற இருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதி & நாடியா சாங் – ரசிகர்கள் உற்சாகம்!
அவரது எலிமினேஷன் கமலை கூட வருத்தப்பட வைத்தது. அதனை தொடர்ந்து அவர் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 12 லட்சம் ரொக்கத்தை எடுத்து கொண்டிருக்கலாம் என பலர் தெரிவித்த நிலையில் அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி அவருக்கு வாரத்திற்கு 70 ஆயிரம் என 14 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ரூ. 9,80,000 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 30 % வரி பிடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.