விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் எலிமினேட் ஆகும் இசைவாணி? முதல் நாமினேஷன் தொடக்கம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் எட்டாவது நாளான இன்று, முதல் நாமினேஷன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் கன்பெசன் ரூமில் நாமினேஷன் செய்ய தொடங்கி உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது. நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து உள்ளே அனுப்பி வைத்தார். அதன் பின் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. அதனால் போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் நட்பாக பழகி வந்தனர். அதில் முதல் திருநங்கை போட்டியாளராக களமிறங்கிய நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
வெண்பாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இன்னும் 2, 3 நாட்களில் நமிதா மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரம் தற்போது தொடங்கி உள்ளது. இந்த வாரம் கட்டாயம் எலிமினேஷன் இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் இருவரை நாமினேஷன் செய்ய வேண்டும். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் முதலில் அக்ஷரா இசைவாணியை நாமினேஷன் செய்கிறார்.
ஹேமாவை பார்த்து கதறி அழும் கண்ணம்மா, அதிர்ச்சியில் பாரதி – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!
அதன் பின் அக்ஷ்ராவை அபிஷேக் நாமினேஷன் செய்கிறார். பின் அண்ணாச்சி அபிநய்யை நாமினேஷன் செய்கிறார். பின் நிரூப் அபிநய்யை நாமினேஷன் செய்கிறார். இசையை அபிநய் மீண்டும் நாமினேஷன் செய்கிறார். அவரால் அனைவரிடமும் சேர முடியவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. அக்ஷராவிற்கு அவரால் இந்த வீட்டில் சகஜமாக இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர். அபிநய் அவர் திட்டத்தின் படி அனைவரும் விளையாட வேண்டும் என சொல்வது போல இருப்பதாக காரணம் சொல்கின்றனர்.