விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடுதலாக, இந்த முறை மூவர் டேஞ்சர் சோனில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
‘பிக் பாஸ் 5’ தமிழ்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ஒரு ரியாலிட்டி ஷோ தான், பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியினை தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 18 போட்டியாளர்கள் மொத்தமாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளே அனுப்பப்பட்டனர். முதல் இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது தான் பலரது உண்மையான முகங்கள் தெரிய வருகிறது. இந்த முறை வீட்டில் இருக்கும் பலரும் நாமினேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் சன் டிவி அண்ணியார் மகள் – ரசிகர்கள் வாழ்த்து!
போட்டியினை பொறுத்தவரை நாமினேஷனில் இருப்பவர்களுக்கு மக்கள் ஒட்டு போட வேண்டும். அவர்களில் யார் குறைவான எண்ணிக்கையில் ஓட்டுகளை பெருகிறாரோ, அவரே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார். போட்டியாளரின் உண்மைத் தன்மை, போட்டியிகளில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை வைத்தே மக்கள் ஒருவருக்கு தங்களது ஓட்டுகளை தருவர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளது தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு தான்.
ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இதில் மிக குறைந்த ஓட்டுகளுடன் டேஞ்சர் சோனில் நாதியா, சின்னப்பொண்ணு மற்றும் அபினவ் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. நாதியா ஆரம்பத்தில் இருந்தே யாருடனும் அதிகமாக பேசவில்லை. இதனால் அவரை பற்றி மக்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை என்று தான் கூற வேண்டும். அதே போலவே அபினவ் மற்றும் சின்னப்பொண்ணு இருவரும் வீட்டில் நடைபெற்ற சில சண்டைகளுக்கு காரணமாக இருந்து விட்டனர். இதனால் இந்த மூவரில் யார் நாளை எலிமினேஷன் ஆகப் போகின்றனர் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.