Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் – ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!

0
Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் - ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் - ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
Vijay TV Bigg Boss 5: சிபி, அபிஷேக் இடையே முற்றிய மோதல் – ஷாக்கான போட்டியாளர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் ரெட் டிவி, ப்ளூ டிவி டாஸ்க்கின் நடுவில் ஒரே அணியை சேர்ந்த சிபி மற்றும் அபிஷேக் இடையே நடக்கும் வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக மாறுகிறது. இது தொடர்பான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்:

விஜய் டிவியின் பெரிய முயற்சிகளில் தவிர்க்க முடியாத இடத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி பிடித்துள்ளது. பெரும் தயக்கத்துடனே ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, அதன் சச்சரவுகள் காரணமாகவே வெற்றி அடைய தொடங்கியது. முன்பின் அறிமுகம் இல்லாத போட்டியாளர்கள் ஒரே வீட்டில் 100 நாட்களை கழிக்க வேண்டும். இத்துடன் கொடுக்கப்படும் டாஸ்குகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே நிகழ்ச்சியின் கரு. இதில், ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனி குணாதிசயங்களோடு நடந்து கொள்வதால், அடிக்கடி கருத்து மோதல்கள் மிகவும் பயங்கரமாக நடக்கும்.

“பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு மீண்டும் வந்த ரோஷினி? வெண்பா பரீனா கொடுத்த விளக்கம்!

ஒவ்வொரு வாரமும் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். வாரத்தில் 3 நாட்கள் இந்த டாஸ்க் நடைபெறும். இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணியினராக பிரிக்கப்பட்டு ரெட் டிவி, ப்ளூ டிவி என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த போட்டியின் நடுவராக சஞ்சீவ் உள்ளார். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து செய்தி சேனல்களை போல் நடத்த வேண்டும் என்பது தான் போட்டி. அதிலும், மற்றவர்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லாத விஷயங்களை வெளியில் கொண்டு வரும் படி போட்டி நடக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

‘முதன் முறையாக என்னை நான் உணர்ந்து கொண்ட தருணம் ‘ – மனம் திறந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி!

கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் இப்போட்டியில், பல சண்டைகள் நடந்து வருகிறது. அதில் பாவனி மற்றும் அபிநய் பற்றிய கேள்விகள் அதிகம் இருந்து வருகிறது. இதனால் பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் இந்த டாஸ்க் தொடர்கிறது. அதில், வருண் மற்றும் தாமரை இருவரையும் உட்கார வைத்து ப்ரியங்கா மற்றும் சிபி இருவரும் கேள்வி கேட்கின்றனர். அப்போது, அண்ணாச்சிக்கும் உங்களுக்குமான உறவு என்ன என்று தாமரையை ப்ரியங்கா கேட்க சிபி இந்த கேள்வியை தவிர்க்குமாறு கூறுகிறார். இதனால் சிபி மற்றும் அபிஷேக் இடையே சண்டை முற்றுகிறது. இறுதியாக சஞ்சீவ் சைலன்ஸ் என்று கத்துவது போல் ப்ரோமோ முடிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!