Vijay TV Bigg Boss 5 Promo | டாஸ்கில் பயங்கரமாக முட்டிக் கொள்ளும் ப்ரியங்கா & நிரூப் – சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு!
பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் படி டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. இதனால் நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. வீட்டில் யார் எப்போது சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று ஒரே பதட்டமாகவும் உள்ளது.
ப்ரோமோ வெளியீடு:
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 70 வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார இறுதியில் இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அண்ணாச்சியின் வெளியேற்றட்டதை எதிர்பார்க்காத பல போட்டியாளர்களும் அழுது தீர்த்து விட்டனர். மேடையில் பேசும் போது கமல் நாம் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்று உறுதியளித்தார். இதனால் இமான் மிகவும் சந்தோஷப்பட்டார். அதன் பிறகு, இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று முதல் டாஸ்குகள் வேறு லெவல்களில் கொடுக்கப்படுகிறது.
வருண் சத்யா பிரச்சனைக்கு ஷீலா தான் காரணம், உண்மையை அறிந்த மனோகர் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!
இந்த முறை பெரிய மாற்றமாக அனைத்து போட்டியாளர்களை பிக் பாஸ் நாமினேட் செய்துள்ளார். அதன் பிறகு, பிக்பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்குகளிலும் போட்டியாளர்கள் வெற்றி பெற்று பாதுகாக்கப்படுவார்கள். அதன்படி, நேற்றைய டாஸ்கில் சிபி பட்டியலில் இருந்து பாதுகாக்கப்பட்டார். இன்று வெளியான ப்ரோமோவின் படி போட்டியாளர்களுக்கு பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அடிக்கும் ஒவ்வொரு மணிக்கும் ஒரு போட்டியாளர் வெளியேற வேண்டும்.
உண்மையை சொல்லி திருமணம் செய்ய போராடும் தமிழ், சரஸ்வதி – அடுத்த வார எபிசோட்!
தற்போது வெளியான ப்ரோமோவின் படி, யார் பஸ்ஸில் இருந்து இறங்க வேண்டும் என்று ஒரு வாக்குவாதம் நடக்கிறது. அதில், பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் தான் இறங்க முடியாது என்று பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். இதனால் இன்றைய போட்டியில் பயங்கரமான சண்டை உள்ளது என்பது தெளிவாகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து பிரியங்கா மற்றும் நிரூப் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் சமீப நாட்களில் இவர்கள் இருவருக்கும் தான் அதிக சண்டைகள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.