தாமரையின் நாணயத்தை எடுத்த ஸுருதி, கண்ணீரில் அழுது புலம்பும் தாமரை – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வீட்டின் தலைவராக மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த இரண்டாவது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு, தற்போது 22 நாள் ஆகிறது. நான்காவது வாரத்தில் வீட்டில் தலைவராக மதுமிதா தேர்வாகி இருக்கிறார். மேலும் போட்டியின் நாமினேசன் ப்ராசஸ் தொடங்கப்பட்டுள்ளது. இம்முறை பிரியங்கா இசைவாணி, பாவனி, ஸ்ருதி, அபிநய், இமான், சின்ன பொண்ணு, வருண் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் போட்டியில் அதிசய நாணயங்களை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
சின்னத்திரை முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வரை – நடிகை பாவனி ரெட்டியின் திரைப்பயணம்!
ஆனால் யாரும் அதை இந்த வாரம் பயன்படுத்தவில்லை. இந்நிலையில் போட்டியாளர்களிடம் இருக்கும் நாணயங்களை மற்ற போட்டியாளர்கள் எடுக்கலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இன்றைய எபிசோடில் தாமரை வைத்திருக்கும் நாணயத்தை அவர் குளிக்க செல்லும் போது ஸுருதி எடுத்து விடுகிறார். அதற்கு பாவனி உதவி செய்கிறார். அவர் கேமராவில் காட்டிவிட நாணயம் இல்லாததை அறிந்த தாமரை சத்தம் போடுகிறார்.
இரண்டாக உடையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம்? மீனா, முல்லையிடம் ஏற்படும் மாற்றம்!
அவர் நாணயத்தை கொடுக்கவில்லை என அழ அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். ஆனால் அவர் நீ செய்தது தவறு என சொல்கிறார்கள். துரோகம் பண்ணிட்ட என சொல்ல, பாவனி கோவப்பட்டு இப்படி இந்த நாணயம் உனக்கு வேண்டுமா என சுருதியிடம் கேட்க, இப்போ நான் இதை கொடுத்தால் அனைத்து பழியும் என் மீது வந்து விடும் என சொல்கிறார். தாமரையை சுற்றி அனைவரும் அமர்ந்து அவரை சமாதானம் செய்ய அவர் அழுது கொண்டே இருக்கிறார்.