கமலை பேச விடாமல் வாக்குவாதம் செய்த பாவ்னி & தாமரை – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 34வது நாளான இன்று நடிகர் கமல் தாமரை பாவ்னி சண்டை பற்றி கேட்கிறார். இது குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 5 கடந்த மாதம் முதல் கோலாகலமாக தொடங்கப்பட்டு மக்களின் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஆண்கள், பெண்கள் என பார்க்கலாம் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். நேற்றைய எபிசோடில் செண்பகமே செண்பகமே டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அடிதடி என இறங்கி விளையாடினார்கள்.
காணாமல் போன தனத்தின் குழந்தை, பதறும் அம்மா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!
அதில் வெற்றி பெற்ற 7 பேர் அடுத்த வாரத்திற்கான நடுவர் போட்டியில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் வருகிறார். முதல் ப்ரோமோவில் கட்டாயம் எலிமினேஷன் இருக்கிறது என அவர் சொல்கிறார். தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கமல் பாவ்னி மற்றும் தாமரை இடையே ஏற்பட்ட சண்டை பற்றி கேட்கின்றனர். அப்போது தாமரை இந்த பொண்ணு எப்போ பார்த்தாலும் என் மனம் புண்படும்படி பேசுகிறது என சொல்கிறார்.
அதற்கு பாவ்னி நீங்களும் தான் பட்டு பட்டென பேசிவிடுகிறீர்கள் என சொல்ல, நான் சொல்வது தவறு என தெரிந்தால் தான் பட்டுனு பேசுவேன் என சொல்ல, கமல் இருவருக்கும் நடுவே பேச முடியாமல் திணறுகிறார். அவர் ஹலோ ஹலோ என கத்த இருவரும் அவர் முன்னாடியே வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் இன்றைய எபிசோடு கண்டிப்பாக சூடு பிடிக்க இருக்கிறது என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.