Vijay TV Bigg Boss 5 Promo | பிரியங்கா சொன்ன அந்த ஒரு விஷயம், அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இன்று புத்தாண்டு கொண்டாடட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்த வீட்டில் கற்றுக் கொண்ட பாடம் குறித்து ப்ரியங்கா பேசும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. சென்ற வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்த ப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது. அது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதன் பின் இந்த வாரம் இறுதி போட்டிக்கான டிக்கெட் வைக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு சுற்றாக விளையாட்டுகள் கொடுக்கப்படும். அதில் விளையாடுபவர்கள் இறுதியாக அந்த டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். தற்போது நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அமீர் சிபி விளையாடுவது போல காட்டப்பட்டது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இதில் போட்டியாளர்கள் விடாமுயற்சி உடன் விளையாடுவது மக்களிடம் பெரிதும் பேசப்பட்டது. கடந்த சீசன்கள் போலே இல்லாமல் இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். மேலும் கமல் சாரும் பல கேள்விகளை போட்டியாளர்களை பார்த்து நேரடியாக கேட்டு வருகிறார். இந்நிலையில் நாளை புத்தாண்டு என்பதாலும் இன்னும் 2 வாரத்தில் இறுதி சுற்று வர இருப்பதாலும் போட்டியாளர்கள் இந்த வீட்டிற்குள் என்ன கற்றுக் கொண்டார்கள் என கேள்வி கேட்கப்பட்டது.
ஜன.12 இல் மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி – பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு!
அதில் பிரியங்கா பேசிய போது இந்த வீட்டில் நான் ஒரு எமோஷனல் பேர்சன் என தெரிந்தும் நான் கத்துக்கிட்டது என்ன என்றால் ஒரு விஷயம் உன்னோடதாக இருந்தால் அது கண்டிப்பாக உன் கிட்ட தான் இருக்கும். அப்படி உன்னிடம் அது இல்லாமல் இருந்தால் அது உன்னுடையது இல்லை என தெரிந்து கொண்டு அதை விட்டு விலக வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்.