Vijay TV Bigg Boss 5 Promo | தாமரையுடன் இனிமேல் பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாமரைக்கும், பிரியங்காவிற்கும் இடையே அடிதடி சண்டை அளவிற்க்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் 90 நாட்களை நெருங்கி உள்ளது. ஒவ்வொரு சீசனும், ஒவ்வொரு மாதிரி இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் நண்பர்கள், அன்பு பாசம் அனைத்தையும் மறந்து போட்டி என்று வந்தால் கடுமையாக விளையாடி வருகின்றனர். அடுத்ததாக இந்த சீசனில் தற்போது 8 போட்டியாளர்கள் இறுதி சுற்றிற்கு நேரடியாக செல்லும் டிக்கெட்டை கைப்பற்ற வேண்டும் என ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் விருந்து கொண்டாடிய நடிகை நக்ஷத்ரா – வைரலாகும் வீடியோ!
அவர்களில் முதல் சுற்றில் நிரூப் போட்டியை விட்டு வெளியேறினார். டாஸ்க் கொடுத்து அதில் தோல்வி அடைந்தவர்களை போட்டியை விட்டு வெளியேற்றாமல் அனைவரும் சேர்ந்து பேசி நிரூப்பை போட்டியை விட்டு வெளியே அனுப்பியது சரியானதாக தெரியவில்லை. இருந்தாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்ததாக போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்களின் முட்டையை மற்ற போட்டியாளர்கள் உடைக்க வேண்டும்.
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
அதில் பிரியங்கா மற்றும் தாமரைக்கு தள்ளு முள்ளு வருகிற அளவு சண்டை வந்துள்ளது. அதனால் கோவப்பட்ட பிரியங்கா என்னை தாக்கினால் நானும் தாக்குவேன், நான் அவளுக்கு எவ்வளவு சொல்லி கொடுத்திருக்கேன். ஆனால் அவள் இப்படி செய்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இனிமேல் என்ன நடந்தாலும் அவளுடன் பேசுவதாக இல்லை என பாவ்னியிடம் சொல்கிறார்.