விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” ப்ரோமோ – தனது மகன் பற்றி கண்ணீருடன் பேசிய தாமரை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இரண்டாவது வாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது வாரம் தொடங்கப்பட்டு வீட்டின் தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி போட்டியில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நாமினேஷன் பிராசஸ் தொடங்கப்பட்டு அதில் பாவனியை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் யாரு எலிமினேஷன் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்துள்ளது.
சந்தியா, சரவணனிற்கு வண்டி ஓட்ட சொல்லி தருவதை பார்த்த சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
இந்நிலையில், இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இந்த வாரமும் தொடங்குகிறது. நேற்றைய எபிசோடில், பிரியங்கா, அக்ஷரா, மாஸ்டர் பட புகழ் சிபி ஆகியோர் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பேசினார்கள். இன்றைய எபிசோடில் அந்த டாஸ்க் தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் வீட்டின் தலைவர் தாமரை பேசுகிறார். அவர் தன்னுடைய மகனை பற்றி இந்த எபிசோடில் பேசுகிறார். அப்போது தனது மகனை யாரோ வைத்திருப்பதாக சொல்கிறார்.
அவர்களிடம் சென்று அவனை அழைத்ததற்கு அவன் வரமாட்டேன் என சொல்லிவிட்டதாக சொல்கிறார். தன் மகனை 4 மாதமாக பார்க்காமல் இருப்பதாக அவர் கண்ணீருடன் சொல்ல, அதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் பயங்கரமாக அழுது கொண்டிருக்கின்றனர்.அவரின் சோகத்தை மறைத்து இந்த வீட்டில் சந்தோசமாக இருப்பது மக்களிடம் அனுதாபத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் இந்த வாரம் அவர் நாமினேஷனில் இல்லாததால் சரியாக எதையும் சொல்ல முடியாத நிலை உள்ளது.