‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த அடுத்த வைல்ட் கார்டு போட்டியாளர் இவர் தானா? ரசிகர்கள் உற்சாகம்!
பிக் பாஸ் வீட்டில் சமீபத்தில் தான் பழைய போட்டியாளரான அபிஷேக் வந்தார். அதன்பிறகு, புதிதாக ஒரு வைல்ட் கார்டு என்ட்ரியாக அமீர் என்ற நடன இயக்குனர் வந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு போட்டியாளர் புதிதாக வந்துள்ளது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வைல்ட் கார்டு என்ட்ரி:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அன்பு மழையை பொலிந்து கொண்டிருந்தனர். அதன்பிறகு, கொடுக்கப்பட்ட டாஸ்குகளின் போது போட்டியாளர்கள் அனைவருக்குள்ளும் மோதல்கள் வெடிக்க தொடங்கியது. மாறுபட்ட கருத்துகளினால் அதிக வாக்குவாதங்கள் உண்டானது. மேலும், இந்த சீசனில் கொடுக்கப்படும் போட்டிகள் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்து வீட்டில் பிரச்சனையான கருத்துக்களை கூறி வந்த அபிஷேக் தான் போட்டியின் இறுதி வரை இருந்து அனைவரையும் ஓட விட போவதாக கூறி வந்தார்.
“கயல்” சீரியல் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சைத்ரா ரெட்டி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
ஆனால் அபிஷேக் பேசியது பிடிக்காமல், மக்கள் அவரை அந்த வாரமே வெளியேற்றினர். அபிஷேக்கின் எலிமினேஷனை யாரும் எதிர்பார்க்காத காரணத்தால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் மீண்டும் அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அபிஷேக்-ன் ரீ என்ட்ரி காரணமாக ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக புதிதாக ஒரு போட்டியாளர் பிரபல நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் மிகவும் அமைதியாகவே தற்போது வரை இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், இன்றைய டாஸ்க் குறித்து இமான் அண்ணாச்சி படிக்கிறார். அந்த டாஸ்கின் போது, வீட்டில் என்ன நடந்தாலும் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் அன்றாட வேலைகளை கவனிக்க வேண்டும். மீறினால் நேரடியாக எவிக்சன் பட்டியலுக்கு சென்று விடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பிக் பாஸ் வீட்டின் மெயின் கதவு திறக்கப்படுகிறது. இதன்படி, ஒரு புதிய போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருகிறார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கத்துவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவலின் படி தற்போது சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் தான் வர இருக்கிறார் என்பது தெரிகிறது.