‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ப்ரியங்கா, நிரூப்புடன் மோதல் – வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நிரூப் மற்றும் ப்ரியங்காவுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், ப்ரியங்கா ‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்வது போல வெளியான ப்ரோமோ பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி, சமீப காலமாக காரசாரமான எபிசோடுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு சண்டை, பிரச்சனையுடன் சிறிய குழந்தைகள் போல சண்டையிட்டு கொள்ளும் போட்டியாளர்களால் இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 சற்று களையிழந்து காணப்படுகிறது. அந்த வகையில் சாதாரணமாக பேசுவது துவங்கி டாக்ஸ் செய்வது வரையிலும் யாரவது ஒருவருக்குள், ஏதாவதொரு விதத்தில் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த வாரம் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த பிரச்சனை என்றாவதொரு நாள் தீரும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இன்று வரையும் ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. இப்படி இருக்க ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இன்றைய நாளில் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுக்கான சில காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது. அதாவது ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நண்பர்களாக பழகி வந்த நிரூப் மற்றும் ப்ரியங்காவுக்கு இடையே மீண்டுமாக மோதல் போக்கு எழுந்துள்ளது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!
அந்த வகையில் தான் இல்லாத நேரத்தில் ஏன் என்னை கலாய்த்தீர்கள் என ப்ரியங்காவிடம் நிரூப் சண்டையிட, நீ என்னிடம் வந்து கேட்க வேண்டியது தானே என அபிஷேக் குறுக்கிடுகிறார். இப்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடிக்க, சிபியின் பெட்டில் அமர்ந்து இதை எல்லாருமே பண்ணலாம் என பேசியதை எனக்காக போடுங்கள் பிக்பாஸ், இல்லையென்றால் என்னை வெளியே அனுப்புங்கள், நான் போகிறேன் என கேமராவை பார்த்து ப்ரியங்கா பேச என்னதான் நடக்கிறது இந்த ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.