Vijay TV Bigg Boss 5 Promo | பிரியங்கா, ராஜு தான் வீட்டின் ஒற்றுமைக்கு காரணம்! நிரூப்பின் தந்தை ஓபன் டாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு விருப்பமான ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய எபிசோடில் நிரூப்பின் அப்பா வீட்டிற்கு வருகிறார்.
பிக்பாஸ் ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 80 நாட்கள் ஆகிறது. இந்த நிகழ்ச்சியில் டாப் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வார தலைவராக தாமரை இருக்க பிரியங்கா, வருண், நிரூப், சிபி, அக்ஷரா, பாவ்னி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக வந்த சஞ்சீவ் அமீர் தங்களது வாழ்க்கை கதையை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய எபிசோடில் சஞ்சீவ் அவருடைய கஷ்டங்களை சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் – வைரலாகும் புகைப்படங்கள்!
இதற்கிடையில் நேற்றைய எபிசோடில் அக்ஷராவின் அம்மா அண்ணா, சிபியின் அப்பா மற்றும் அவர் மனைவி ஆகியோர் வந்தனர். அவர்கள் போட்டியாளர்களிடம் பேசிய தகுதியை வைத்தே போட்டியாளர்கள் தரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இன்றைய எபிசோடில் அமீர் தன்னுடைய வாழ்க்கை கதையை சொல்ல இருக்கிறார். அதே போல நிரூப்பின் அப்பா வந்திருக்கிறார். அவர் பிரியங்காவை பார்த்து இவனுக்காக தான் நான் பிக்பாஸ் பார்க்க தொடங்கினேன்.
குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
அபிநய் கையை பிடித்துக் கொண்டு அன்னைக்கு நீ பேசியதை பார்த்த போது எனக்கு வந்த கோவம் இருக்கிறதே என சொல்கிறார். உன்னை பார்த்து எனக்கு பிபி ஏறிவிட்டது என சொல்ல, பின் பிரியங்கா மற்றும் ராஜூவை பார்த்து நீங்க இருவரும் தான் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்துகிறீர்கள் என சொல்லி இருக்கிறார். பிரியங்கா இஷ்டப்படி நிறைய பேசுவார். ஆனால் இவன் பார்த்துக் கொண்டே இருப்பான், அப்பறம் சரியான நேரத்தில் பேசுவான். இந்த வீட்டில் கோவம் அதிகம் வராமல் நீங்க இருவரும் கண்ட்ரோல் பண்றீங்க என பெருமையாக சொல்கிறார்.