Vijay TV Bigg Boss 5 Promo | ராஜுவின் பதிலால் கோபமடையும் அக்ஷரா, ரசிகர்கள் ஷாக்!
தற்போது கடுமையான போட்டிகளுடன் களம் கண்டு வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில், டைஸ் தொடர்புடைய டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் அக்ஷரா மற்றும் ராஜுவுக்கு இடையில் சிறிய வாக்குவாதம் உருவாகி இருப்பதை போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தற்போது 3வது மாதத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், வரவர போட்டிகள் அனைத்தும் கடுமையாகி கொண்டே போகிறது. இதுவரை போட்டியாளர்கள் அனைவரும் எலிமினேஷனுக்காக மற்றவரை நாமினேட் செய்து வந்த நேரத்தில், இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த எவிக்ஷன் ப்ராசஸில் இருந்து தங்களை காத்துக்கொள்ள விரும்பும் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
சரவணன் உடல்நிலையை அறிந்து போட்டி வேண்டாம் என சொல்லும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
அந்த வகையில் இன்றைய நாளுக்கான போட்டியில் டைஸ் வடிவிலான ஒரு பெரிய பெட்டி கொடுக்கப்பட்டு அதில் ஒவ்வொருவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இப்போது போட்டிக்கான முதல் பஸர் அடித்ததும் இந்த போட்டி துவங்கும். இதையடுத்து ஒவ்வொரு பஸர் அடிக்கும் போதும் போட்டியாளர்கள் அந்த டைஸை மாற்ற வேண்டும். அந்த வகையில் 3வது பஸர் அடிக்கும் போது யாருடைய புகைப்படம் மேலே நோக்கி இருக்கிறதோ அவர் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று புதிய டாஸ்க்குக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த டாஸ்கை போட்டியாளர்கள் அபிநய், அமீர், அக்ஷரா, தாமரை செல்விமற்றும் ராஜு ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் தன்னை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக டைஸில் மீது அமர்ந்து கொண்டு அதனை மாற்ற விடாமல் தடுக்கிறார் ராஜு. ஆனால் மற்ற அனைவரும் சேர்ந்து அவரை தள்ளி விட்டு முதல் முறை டைஸை மாற்றி விடுகின்றனர். பிறகு மீண்டுமாக டைஸ் மீது ராஜு ஏறி அமர்ந்துகொள்ள அதில் அக்ஷராவின் புகைப்படம் இடம்பிடிக்கிறது.
சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி பாரதியை மிரட்டும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இப்போது அந்த புகைப்படத்தை மாற்றினால் மட்டுமே, அவர் போட்டியில் இருந்து காப்பாற்றப்படுவார் என்ற சூழ்நிலை ஏற்பட அக்ஷரா ராஜுவிடம் சென்று, இதில் என் புகைப்படம் இருக்கிறது. இதனை நான் மாற்ற வேண்டும். இப்படி உட்கார்ந்திருந்தால் என்ன செய்வது என கேட்க, சும்மாயிரு என ராஜு பதில் சொல்கிறார். ராஜுவின் இந்த பதிலால் கடுப்பான அக்ஷரா அங்கிருந்து கோபத்துடன் செல்வது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.