விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து பிரியங்காவை வெளியேற்ற சொன்ன நிரூப் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் வழக்கம் போல பிரியங்கா நிரூப், சண்டை நடைபெறுவது போன்ற ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் 3 வாரத்தில் இறுதி சுற்று வர இருக்கிறது. அதனால் போட்டியாளர்கள் குடும்பத்தினர் மற்றும் கமல்ஹாசன் சொன்ன அறிவுரைகளில் படி, விட்டுக்கொடுக்காமல் டாஸ்க்கில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசன் போல இல்லாமல் அனைவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். அதுவே இந்த சீசன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அடுத்ததாக இந்த வாரம் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் நடைபெற இருக்கிறது.
பிஸிக்கல் டாஸ்க் என்றால் போட்டியாளர்கள் அசால்டாக விளையாடுவார்கள். ஆனால் பிக்பாஸ் அப்படி செய்யாமல் தற்போது புதுமையான டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் இந்த டாஸ்கில் யாரு தகுதி இல்லாதவர்கள் என பேசி முடிவு செய்து அவரை வெளியே அனுப்ப வேண்டும். போட்டியாளர்கள் தங்களது பக்கம் உள்ள நியாயத்தை பேச வேண்டும். இந்நிலையில் இந்த டாஸ்கில் நிரூப் மோதி பார்த்து முடிவு செய்யலாம் என சொல்கிறார்.
ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் பிரியங்கா நீ இந்த டிக்கெட் எடுக்க கூடாது என நான் நினைக்கிறேன். உன்ன மாதிரி ஒருவருடன் என்னால் போட்டி போட்டு வெற்றி பெற முடியாது என பிரியங்கா சொல்ல, வழக்கம் போல நிரூப் கடுப்பாகிறார். உடனே அவர் போட்டி போட தயாராக இருக்கிற நான் இருக்க வேண்டுமா, இல்லை போட்டி போட முடியாது என சொன்ன பிரியங்கா இருக்க வேண்டுமா என நீங்களே முடிவு செய்து வெளியே அனுப்புங்க என சொல்கிறார்.