இன்னும் 7 நாட்கள், விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாக இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சில பிரபலங்கள் பெயர்கள் தற்சமயம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதாவது கடந்த 4 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஆதரவுகள் கிடைத்திருந்தது. இதன் முதல் சீசனை பொறுத்தளவு, நிகழ்ச்சி அமைப்பு குறித்த விளக்கங்கள் எதுவும் விளங்காத நிலையில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு வந்தனர். அதனால் அந்த சீசன் மாபெரும் வெற்றி பெற்றது.
கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா – வெளியான ப்ரோமோ!
இதை தொடர்ந்து ஒளிபரப்பான 2வது சீசன் சற்று ஸ்வாரஸ்யம் குறைந்ததாகவே காணப்பட்டது. அதனால் ரசிகர்களின் கண்ணோட்டத்தை புரிந்து கொண்ட நிகழ்ச்சி குழுவினர், 3 வது சீசனில் இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து சில பிரபலங்களை இறக்கியது. அதே போல எதிர்பார்த்த அளவுக்கு இந்த சீசன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விஜய் டிவி பிரபலங்கள் பலருடன் வெளியான சீசன் 4ம் சொல்லக்கூடிய அளவுக்கு வெற்றியுடன் முடிவடைந்தது.
அந்த வகையில் சீசன் 5 ஐ இன்னும் சிறப்புடன் நடத்த திட்டமிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் பல புது முகங்களையும், சினிமா பின்புலம் இல்லாத பிரபலங்களையும் நிகழ்ச்சிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா, நடிகை கெளசல்யா, நடிகை ஷகீலாவின் மகள் மிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்தியாவின் ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்ல சொல்லும் அனிதா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
இதுவரை வெளியாகி இருக்கும் இந்த பெயர் பட்டியலை காண்கையில், பிக்பாஸ் சீசன் 5 கண்டிப்பாக வெற்றியடையும் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்து வருகிறது. என்றாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் அக்டோபர் 3ம் தேதி பிக்பாஸ் சீசன் 5ன் கிரேண்ட் லான்ச் ஒளிபரப்பாக இருக்கிறது. அப்போது போட்டியாளர்கள் குறித்த ரசிகர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அதிகாரப்பூர்வ பதில்கள் கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.