விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 கோலாகலம் – தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்! வெளியான போட்டோ!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்ள நிலையில், போட்டியாளர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும். இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ஆண்டும் நடிகர் கமல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிகிறது. மேலும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் போட்டியாளர்கள் தனிமைப்படுத்த தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்ணம்மாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி – ஆப் ஸ்கிரீன் வைரல் புகைப்படம்!
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் ஒரு சில நட்சத்திரங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாகியுள்ளது. அதில் மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி உள்ளிட்டோர் உள்ளனர். அதனால் இவர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜிபி முத்துவும் தனது யூடுப் சேனலில் இதே போல ஹோட்டலில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் திருமணம்? திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!
அதில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்வது போல காட்டப்படுகிறது. அதனால் அவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.