குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு – ஆளுநர் பதவிப் பிரமாணம்!
குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த விஜய் ரூபானி திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
புதிய முதல்வர்:
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஆண்டில் நடக்க உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். இவர் திடீரென்று செப்டம்பர் 11ம் தேதி குஜராத் மாநில முதல்வர் பதவியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தார். விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் நாட்கள் – தேவசம் போர்டு அறிவிப்பு!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் பதவியை ராஜினாமா செய்த நான்காவது முதல்வர் ரூபானி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர், இவர் செய்தியாளர்களிடம் குஜராத் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சி வழங்கும் எந்த பதவியையும் தான் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ உதவி – அரசு அறிவிப்பு!
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு தகுதியான நபர் குறித்து பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, குஜராத் காந்தி நகரில் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். காந்திநகரில் முதல்வர் பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத்தில் 17வது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நரேந்திர தோமர், மன்சுக் மண்டாவியா, பிரகாலத்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.