BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 2 மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியம்…!
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Part Time Medical Consultant (MBBS/ Specialist) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) Part Time Medical Consultant (Specialist) பணிக்கு என 03 பணியிடங்களும், Part Time Medical Consultant (MBBS) பணிக்கு என 05 பணியிடங்களும் என மொத்தமாக 08 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- PTMC Specialist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Child Health, Ophthalmology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, DNB, DGO அல்லது PG Diploma Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Part Time Medical Consultant (MBBS) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- PTMC (MBBS) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, 65 வயது என BHEL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 05 வருடம் வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த BHEL பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.440/- முதல் அதிகபட்சம் ரூ.660/- வரை சம்பளமாக பெறுவார்கள்.
- Part Time Medical Consultant (MBBS/ Specialist) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.