பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

0
பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலை காப்பி அடிக்கும் மௌன ராகம் 2 – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மெளன ராகம் சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மௌன ராகம் 2 சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்கள் கொண்ட தொடராக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவால் அதிக விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

மௌன ராகம் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் என்ற பெருமையை கொண்டது மௌன ராகம் சீரியல். இதன் முதன் பாகம் முடிவுக்கு வர தற்போது மெளன ராகம் சீரியலின் 2 ஆம் பாகம் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகத்தில் சக்தி தனது அப்பாவான கார்த்திக் கிருஷ்ணாவின் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்தார். ஆனால் இப்போது 2வது பாகத்தில் குழந்தைகளான ஸ்ருதி, சத்யா வளர்ந்து விட்டனர்.

கோபியின் மீதி கொலை வெறியில் இருக்கும் பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைக்களம் வேற மாதிரி இருந்த நிலையில், வருண், சத்யா திருமணத்திற்கு பிறகு மொத்தமாக சீரியலின் கதையே மாறியது. அதாவது இருவருக்கும் இடையில் காட்டப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் அதிக அளவில் வைரலாகியது. இவ்வாறு விஜய் டிவி சீரியல்கள் லிஸ்டில் மௌன ராகம் தொடரும் டி.ஆர்.பியில் நல்ல ரேட்டிங்கை பெற்று வரும் சீரியல் ஆக விளங்கி வருகிறது. இந்நிலையில், சத்யாவை பழிவாங்க நினைத்து ஸ்ருதி, தருணை மிரட்டி திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறார்.

விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த “பாரதி கண்ணம்மா” – ரசிகர்கள் உற்சாகம்!

இவ்வாறு மொத்த குடும்பமும் சத்யாவை கொண்டாடுவது ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதே போல், கார்த்திக் கிருஷ்ணா சத்யா மீது காட்டும் பாசம் ஸ்ருதிக்கு சந்தேகத்தை வர வைக்கிறது. இப்படி இருக்கையில் வில்லி சுருதி வருணிடம் திருமணத்திற்கு முன் தருண், சத்யா இருவரும் காதலித்தார்கள் என கூறிவிட தற்போது மனைவி மீது வருண் சந்தேகம் கொண்டு சத்யாவிடம் தம்பியை காதலித்து விட்டு என்னை எப்படி திருமணம் செஞ்ச? உனக்கு மனசாட்சியே இல்லையா? என்று சண்டை போடுவது போன்றும், அதன் பின் சக்தி வீட்டை விட்டு வெளியேறுவது போன்றும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பாரதி கண்ணம்மா தொடரை பார்த்து காப்பி அடிக்கிறார்கள் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!