பாரதியும், கண்ணம்மாவும் ஜானகி அம்மாவுக்கு செய்து கொடுக்கும் சத்தியம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இரண்டு புதிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகி உள்ள நிலையிலும் சீரியல் கொஞ்சம் டல்லாகவே சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் இனியாவது கண்ணம்மாவும் பாரதியும் சேருவார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ப்ரோமோ வெளியீடு:
பாரதி கண்ணம்மா சீரியலில் சில கருத்து வேறுபாடு காரணமாக பாரதி மற்றும் கண்ணம்மாவும் 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் பாரதியை கல்யாணம் பண்ண வேண்டும் என்று பல சதித் திட்டங்களையும் வெண்பா தீட்டி வருகிறார். இதற்கிடையில் ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர், பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் கதை ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, திடீர் திடீர் என புதிய கதாபாத்திரங்கள், பாரதி கண்ணம்மா தொடரில் என்ட்ரி கொடுத்தனர்.
Exams Daily Mobile App Download
முதலில் விக்ரம் கதாபாத்திரம், பின்பு வெண்பா அம்மா கதாபாத்திரம், பின்பு ரோஹித். மேலும் விக்ரம், கண்ணம்மா மற்றும் பாரதியையும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்து இருவரையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். இதையடுத்து சர்மிளா, வெண்பாவையும் ரோஹித்தையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். வில்லியாக கெத்தாக வலம் வந்த வெண்பா தற்போது டம்மியாக மாறிவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சீரியல் டல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் பாரதிகண்ணம்மா தொடரில் புதிதாக ராமன், ஜானகியம்மா என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.
ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எப்போது? வலுக்கும் கோரிக்கைகள்!
அதாவது ராமன், ஜானகியம்மா கதாபாத்திரங்கள் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஜானகியம்மாவுக்கு உடல்நிலை குறைவு காரணமாக பாரதிமற்றும் கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகள் கூட நல்ல நெருக்கமாக பழகி வருகிறார். மேலும் ஜானகி அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் போகிறார் பாரதி. இந்நிலையில் இந்த வார ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ஜானகி அம்மா, பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் ஒரு சத்தியம் வாங்குகிறார். அது என்னவென்றால், உங்க பிரச்சனை எல்லாம் மறந்துவிட்டு உங்க குழந்தைகளோட ஒரே ஒரு நாள் வெளில போயிட்டு வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க என்று கூறுகிறார். மேலும் அடுத்து என்ன நடக்கும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.